சேலம்: கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே அமர வைப்பு

சேலத்தில், தனியார் பள்ளி ஒன்றில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவிகளை, வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம்: கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே அமர வைப்பு

கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாநகர் காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், முழு கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவிகளை, பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்கு வெளியே அமர வைத்துள்ளது. இது குறித்து தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளி நிர்வாகம், மாணவிகளை மீண்டும்  வகுப்பறைக்குள் அனுமதித்துள்ளது.