” சனாதனம் அனைவருக்கும் பொதுவானது” - அண்ணாமலை

” சனாதனம் அனைவருக்கும் பொதுவானது”  - அண்ணாமலை

சனாதனம்  யாருக்கும் எதிரி கிடையாது என்றும், இந்தியாவை பொறுத்தவரை சனாதனம் அனைவருக்கும் பொதுவானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சனாதனம்  யாருக்கும் எதிரி கிடையாது என்றும், இந்தியாவை பொறுத்தவரை சனாதனம் அனைவருக்கும் பொதுவானது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பங்கேற்று பேசிய அண்ணாமலை, சனாதனம் பிற மதங்களுக்கு எப்போதும் எதிரி அல்ல என்று கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரித்திரத்தை சரியாக படிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சாதி அரசியல் தலைதூக்கியது என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை,  கடந்த 70 ஆண்டுகளில் திராவிட ஆட்சி செய்த சாதனைகள் என்ன?  என வினவினார். 

ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு செய்தது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

இதையும் படிக்க   | "சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யும் அண்ணாமலை.! " - விசிக தலைவர் திருமாவளவன்