சரத்பவார் விவகாரம்; "அமலாக்கத்துறை தான் வெற்றி பெற்றுள்ளது" முத்தரசன் குற்றச்சாட்டு!

சரத்பவார் விவகாரம்; "அமலாக்கத்துறை தான் வெற்றி பெற்றுள்ளது" முத்தரசன் குற்றச்சாட்டு!

மஹாராஷ்டிராவில் சரத்பவார்  ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தான் வெற்றி பெற்றுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போரே நடந்தது. அவர்களுக்கு எதிரான கொடூரமான சம்பவங்கள் நடந்தது. அதற்கு நரேந்திர மோடி தான் காரணம் என கூறியவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். மோடிக்கும், அமித்ஷாவிற்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். 

மேலும், குஜராத்தில் உள்ள கீழ்மை நீதிமன்றம் தான் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு தண்டை வழங்கியது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு ஒரு மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருக்கும் நீதிமன்றங்கள் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது. அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என கூறினார்.

தொடர்ந்து, கர்நாடகவில் தோல்வி அடைந்த பின்னர் பா.ஜ.க ஆட்டம் காண தொடங்கி விட்டதாகவும் பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள் என அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். மஹராஷ்டிராவில் சரத்பவார் கட்சியை உடைத்து அஜித்பவார் துணை முதலமைச்சராகவும், அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அவர்கள் பணியை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும் அஜித் பவார் மற்றும் அவருடன் பதிவியேற்ற 8 அமைச்சர்களுக்கும் அமலாக்கத்துறை வழக்கு இருப்பதாக கூறினார்.

இதையும் படிக்க:”எங்கள் இடத்தை எங்களுக்கு விட்டு கொடுங்கள்” கண்ணீர் மல்க அமைச்சரின் காலில் விழுந்த பெண்மணி!