இரகசியமாக சேவல் சண்டை,..போலீசாரை கண்டதும் தெறித்த கும்பல்,. ஆறு சண்டை சேவல்கள் பறிமுதல்.! 

இரகசியமாக சேவல் சண்டை,..போலீசாரை கண்டதும் தெறித்த கும்பல்,. ஆறு சண்டை சேவல்கள் பறிமுதல்.! 

இரகசியமாக சேவல் சண்டை நடத்திய நபர்கள் போலிசாரை கண்டதும் தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.     

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் உட்கோட்டம்  ஜெயமங்கலம் காவல் நிலைய சரக பகுதியில் சேவல் சண்டை நடத்தி, அதன் மூலம் சூதாட்டம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில் டாடா காபி பிரைவேட் லிட் மில்லிற்கு மேற்கே உள்ள VHF தேக்கு மர கரடு பகுதியில் கண்காணித்து சோதனை நடத்தியதில் சுமார் 15 நபர்கள் கூட்டமாக சேவல் சண்டை நடத்தி வந்தது தெரிய வந்தது. 

உடனே போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும்  சூதாட்ட குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். இதனால் சம்பவ இடத்தில் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஆறு சண்டை சேவல்கள், சூதாட்டம் நடத்தி தப்பியோடியவர்கள் பயன்படுத்திய 2 செல்போன்கள்,  ரூபாய் 200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சேவல் சண்டை நடத்திய வத்தலக்குண்டு பகுதியைச் சார்ந்த முகமது பிலால் என்பவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும் சேவல் சூதாட்டம் நடத்தி தப்பியோடியவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.