300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.... ஒருவர் கைது...மற்றொருவர் தப்பியோட்டம்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.... ஒருவர் கைது...மற்றொருவர் தப்பியோட்டம்

இராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை பகுதியில் உள்ள கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் போலீசார், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்த இராமநாதபுரத்தை சேர்ந்த பூபதி என்பரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.