அனுமதியின்றி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல்..இருவரை கைது செய்த போலீஸ்...!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல்..இருவரை கைது செய்த போலீஸ்...!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்று போலீசார், வீட்டு தோட்டத்தை சோதனை செய்தனர்.

அப்போது அங்கு 670 ஜெலட்டின் குச்சிகளும் 342 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து வெடிமருந்துகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை பதுக்கி வைத்திருந்த குமார் மற்றும் டிரைவர் சின்னத்துறை ஆகியோரை கைது செய்தனர்.