" 6 மாதத்தில் புதுப்பொலிவுடன் செம்மொழிப் பூங்கா..! " - தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்.

" 6 மாதத்தில் புதுப்பொலிவுடன் செம்மொழிப் பூங்கா..!  "  - தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்.

இன்னும் 6 மாதத்தில் செம்மொழிப் பூங்கா புதுப்பொலிவுடன் திறக்கப்படும் என  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

லண்டனில் உள்ள ராயல் பொட்டானிக்கல் பூங்கா, துபாயில் உள்ள மிராக்கிள் பூங்காவுக்கு இணையாக, செம்மொழிப் பூங்காவை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதோடு, புதிய செடிகள், மரங்கள், வெளிநாட்டு தாவரங்கள், பல்வேறு வகையான தோட்டங்கள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், குளங்கள், பாலங்கள் போன்ற வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது செம்மொழிப் பூங்கா.

Semmozhi Poonga செம்மொழி பூங்கா | Scenic Botanical Garden in Chennai ...

மேலும்,  அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை  கண்காணிக்க பூங்கா முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

கூடுதல் சிறப்பாக, போட்டோகிராபி,  போட்டோஷூட்  நிகழ்ச்சிகளுக்கெனவே  தனி புல்வெளியும் உருவாக்கப்படுகிறது.

100 THINGS TO DO IN CHENNAI: #58 Relaxing at semmozhi poonga gardenSemmozhi Poonga (Classical Language Park) in Chennai – Destination Infinity

அதுமட்டுமின்றி, தாவரங்கள், விதைகள், மதிப்புக்கூட்டப்பட்ட விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் சார்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | ரூ.404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.!