செந்தில் பாலாஜியின் சகோதரன் சோதனையிட சென்ற வருமான் வரித்துறையின் தாக்கப்பட்டது - நீதிமன்றத்தில் வழக்கு !!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

செந்தில் பாலாஜியின் சகோதரன் சோதனையிட சென்ற வருமான் வரித்துறையின் தாக்கப்பட்டது - நீதிமன்றத்தில் வழக்கு !!!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது, அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரில் உள்ள திமுகவினர் தடுத்ததோடு, அவர்கள் சென்ற வாகனத்தை உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

9 இடங்களில் வருமானவரித் துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டதால், இதுகுறித்து புகார் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்கள் புகார் அளிக்க சென்றுவிட்டு, பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திரும்பிவந்து சோதனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்று பொருட்கள் ஆகியவற்றை திமுக-வினர் எடுத்துச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயாஸ்-க்கு சிகிச்சை.

எனவே இதுகுறித்தும், வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியது குறித்தும் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

தாங்கள் தாக்கப்பட்டது குறித்து மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர் சார்ந்துள்ள கட்சி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டலாம் என்பதாலும், ஒத்துழைக்க மாட்டர்கள் என்பதாலும் சிபிஐ விசாரணை அமைப்பு விசாரிப்பதே சிறந்ததாக இருக்கும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதனிடம் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு அவர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதா என்பது குறித்து விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனை...பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!