தமிழ்நாட்டின் அடுத்த காவல் துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்...!

தமிழ்நாட்டின் அடுத்த காவல் துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்...!

தமிழ்நாடு காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல்துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால், 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். மன்னார்குடியில் காவல்துறை உதவி ஆணையராக பணியை தொடங்கிய சங்கர் ஜிவால். உளவுப்பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தார்.

இதையும் படிக்க : ஆளுநரின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - முதலமைச்சர் காட்டம்!

அதேபோல், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிறந்த சந்தீப் ராய் ரத்தோர், திண்டுக்கல், கோவை மாவட்ட காவல் ஆணையராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக  ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷிவ் தாஸ் மீனா, தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். 1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த ஷிவ்தாஸ், ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகம், போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளில் திறம்பட செயல்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.