குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து டான்ஸ் ஆடிய பாம்புகள்...

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் குடியிருப்பு பகுதியில் பின்னி பிணைந்து விளையாடிய பாம்புகளை தீயனைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து டான்ஸ் ஆடிய பாம்புகள்...

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் புரட்சி நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இன்று மதியம் அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த  மயிலேறி என்பவரது வீட்டு காம்பவுன்ட் சுவர் அருகே 2 சாரை பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடி கொண்டிருந்தது.

இதனை பார்த்த குழந்தைகள் அலறியபடி வீட்டிற்குள் சென்று வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கம் என்பார்கள் அதே போல பாம்புகள் விளையாடுவதை பொதுமக்கள் தொலைவில் இருந்து வேடிக்கை பார்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு வீரர்கள் ஆட்டம் போட்ட பாம்புகளை அலேக்காக பிடித்து  ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதியில் விட்டனர்.