தினசரி பாதிப்பு 2,700-ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி : தமிழகத்தில் புதிதாக 2,731 பேருக்கு கொரோனா தொற்று 

தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது.

தினசரி பாதிப்பு 2,700-ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி : தமிழகத்தில் புதிதாக 2,731 பேருக்கு கொரோனா தொற்று 

தமிழகத்தில் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் படிப்படியாக குறைய தொடங்கியது. அந்தவகையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தொடர்ந்து வேகமாக குறைந்த தொற்று கடந்த நவம்பர் மாதம் முதல் ஆயிரத்துக்கு கீழ் வந்தது. 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தாக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் கொரோனா ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புத்தாண்டுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உயர தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில்  நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் மேலும் இரண்டாயிரத்து 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மேலும் ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பால் நேற்று 9 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்து 364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று நேரத்தில் 674 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து ஆறாயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.