”மாநில கல்லூரியில் வி.பி.சிங்கிற்கு முழு உருவ சிலை” முதலமைச்சர் அறிவிப்பு!

”மாநில கல்லூரியில் வி.பி.சிங்கிற்கு முழு உருவ சிலை” முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு  முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க : ”சமூக நீதிக்காக அச்சமின்றி போராடியவர்” வி.பி.சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்த நிலையில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமராக இருந்த 11 மாதங்களில் வி.பி.சிங் செய்த சாதனைகள் மகத்தானவை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தவர் என புகழாரம் சூட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவருக்கு முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.