காதலை கைவிடும்படி கூறிய இளம்பெண்...விரக்தியில் FAN-ல் தூக்கிட்டு தற்கொலை செய்த காதலன்!!
காதல் தோல்வியால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த புத்தகரம் சிங்காரவேலன் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம் அவரது மகன் சதீஷ்குமார். இவர் கோயம்பேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிகா மீடியா மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்னை காதலித்து வந்துள்ளார். திடீரென அப்பெண் தனது காதலை கைவிடும் படி கூறியதால் மனமுடைந்து பெற்றோர்களிடம் பேசாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் தூங்க செல்வதாக கூறிச்சென்றார் வெகுநேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த தம்பி சந்தோஷ் கதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பேன் ஊக்கில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது பற்றி புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.