விடைத்தாள் குளறுபடி: மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டம்  

திருச்சியில் ஆசிரியர் பட்டயபடிப்பு தேர்வை ஆன்லைனில் நடத்தக்கோரியும், விடைத்தாள் குளறுபடியை சரி செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடைத்தாள் குளறுபடி: மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டம்   

திருச்சியில் ஆசிரியர் பட்டயபடிப்பு தேர்வை ஆன்லைனில் நடத்தக்கோரியும், விடைத்தாள் குளறுபடியை சரி செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்சியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், ஆன்லைன் மூலம் தேர்வு என விண்ணப்பித்துவிட்டு நேரடியாக தேர்வு நடத்துவதாகவும் குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டம் செய்தனர். இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.