#BreakingNews | ஏசி மயமாகும் புறநகர் ரயில்கள்...

சென்னை புறநகர் ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் , ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

#BreakingNews | ஏசி மயமாகும் புறநகர் ரயில்கள்...

சென்னை புறநகர் ரயிலில் குளிர்சாதன பெட்டி

சென்னை புறநகர் ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில்,  தென்னக ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு தயாராகும் ஆவின்...

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே புதிய சேவை அறிமுகம்

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வரப்பட்டுள்ள புறநகர் ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயிலை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்...! நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டம்...!

பயணிகளின் நெடுநாள் கோரிக்கை நிறைவேற்றம்

முதற்கட்டமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.