திடீரென பெய்த கனமழை ...! விவாசயிகள் மகிழ்ச்சி..!

திடீரென பெய்த கனமழை ...! விவாசயிகள் மகிழ்ச்சி..!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் தொடர்ந்து பெய்த அரை மணி நேர கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாக தெரிவித்தனர்.

 தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் மதியம் 3 மணிக்கு பொய்த கனமழை இடைவிடாது அரை மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. நெல்லை மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்  கடந்த ஒரு  சில நாட்களாகவே  வெயில் கடுமையாக இருந்து வந்தது.

இந்நிலையில்  திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் அங்கு  பெய்த கனமழையால் தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடியது. சுமார் அரை மணி நேரம் இடைவிடாமல்  பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இதனால் விவசாய, வியாபார, பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: ஒகேனக்கல் வனப்பகுதியில் இரண்டு யானைகள் உயிரிழப்பு...