சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசியுடன் சிறைக்கு சென்ற சுதாகரன் இன்று விடுதலை?

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன் இன்று விடுதலையாகிறார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசியுடன் சிறைக்கு சென்ற சுதாகரன் இன்று விடுதலை?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் அன்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை  செலுத்தியதால்  2 பேரும்  கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என அறியப்படும்  சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தவில்லை. அபராதத் தொகையை செலுத்தாததன் காரணமாக  நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். சிறையில் இருக்கும் சுதாகரனின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அவர்  இன்று விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.