10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்...நாளை முதல் ஆரம்பம்...!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்...நாளை முதல் ஆரம்பம்...!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை முதல் கோடை விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 216 மையங்களில் 9 கோடியே 76 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். இதில் 37 ஆயிரத்து 798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2 ஆயிரத்து 640 சிறை கைதிகள் அடங்குவர்.

இதையும் படிக்க : மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா...!

இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 முதல் மே 3 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மே மாதம் இரண்டாம் வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.