நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு...!

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு...!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதாவது டிஎன்பிஎஸ்சி- யின் குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நாளை (19.11.2022) நடைபெற உள்ளது. இதில் 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்

18 துணை ஆட்சியர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு வருகிற நாளை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக களமிறங்கியுள்ள மத்திய அரசு..!