அடுத்த 2 நாட்களுக்கு...சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு...!

அடுத்த 2 நாட்களுக்கு...சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு...!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேளடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க : ஜெ.பி. நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு..! திமுக‌ கோப்புகள் இரண்டாம் பாகம் குறித்து ஆலோசனை?.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.