தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அமோக வெற்றி..

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அமோக வெற்றி..

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு  பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு .

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஜிம்மி ஜார்ஜ் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான சிலம்பம்  போட்டிகள் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

இதில் தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஐயன்பிஸ்ட் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி,மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர் .


 
இந்நிலையில் போட்டியில் வென்ற பதக்கங்களுடன் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவர்களை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சந்தன மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் பேருந்து நிலையத்தில் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் .