திருப்பூர்: பாவு நூற்பாலையில் பயங்கர தீ விபத்து!!

திருப்பூர்: பாவு நூற்பாலையில் பயங்கர தீ விபத்து!!

பல்லடம் அருகே பாவு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின...

பாவு நூற்பாலை:

திருப்பூர் மாவட்டம் கரையாம்புதூரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான செல்வராஜ் சைஸிங் பாவு நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

திடீரென்று ஏற்பட்ட கரும்புகை:

இந்நிலையில் இன்று திடீரென நூற்பாலை இயந்திரத்தில் ஏற்பட்ட கரும்புகையானது மளமளவென அருகில் இருந்த பாவு நூல், இயந்திரங்களில் பரவி தீ கொளுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

போலீசார் விசாரணை:

தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் , பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.