தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இருவர் படுகாயம்....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் செயல்பட்டு வந்த தனியார் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இருவர் படுகாயம்....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பரவது மகன் மாடசாமி. இவருக்கு சொந்தமான தீப்பெட்டிஆலை வள்ளுவர் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை இயந்திர தீப்பெட்டி தயாரிக்கும் பகுதியில் இருந்து திடீரென தீபிடித்து மளமளவென எரிந்ததை  பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி உயிர்பிழைத்தனர்.

இது குறித்து  தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இருப்பினும் இதில் வள்ளுவர் நகரைச் சேர்ந்த உத்திரபாண்டியன், கண்ணன் ஆகிய 2 தொழிலாளர்களுக்கு படுகாயமடைந்தனர்.

மேலும் ஆலையின் கட்டிடம் சேதமடைந்தது மட்டுமின்றி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், மூலப்பொருள்கள் எரிந்து நாசமானது.  இந்த  தீ விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.