பிரபல தலைவருக்கு ‘தகைசால்’தமிழர் விருது.. சுதந்திரதின விழாவில்  வழங்குகிறார் முதல்வர்…  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால்’ தமிழர் விருது  சுதந்திரதின விழாவில் வழங்கப்படும் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிரபல தலைவருக்கு ‘தகைசால்’தமிழர் விருது.. சுதந்திரதின விழாவில்  வழங்குகிறார் முதல்வர்…   

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட  குழு அமைத்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.

இந்த நிலையில் தகைசால் தமிழர்” விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு  “தகைசால் தமிழர்” விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் சங்கரய்யாவுக்கு,விருதுடன்  10 லட்சம் ரூபாய்க்கான  காசோலையும், பாராட்டு சான்றிதழும், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில்  வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.