நன்றி தெரிவித்த திமுக துணைப் பொதுச்செயலாளர்...!!

நன்றி தெரிவித்த திமுக துணைப் பொதுச்செயலாளர்...!!

துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி அவரது டிவிட்டர் பதிவில், "திராவிடச் சித்தாந்தத்தின் வழி உதித்த பேரியக்கமான நம் திமு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பளித்து, கழகப்பணியாற்ற வாய்ப்பளித்துள்ள கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும், கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”  எனப் பதிவிட்டுள்ளார்.

15-வது பொதுக்குழுவில், இரண்டாவது முறையாகக் கழகத்தின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும், பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுக்கும், கழகத்தின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்கள் ஐ. பெரியசாபி, பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் அகியோருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்", எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  போலி கல்வி சான்றிதழ் வழக்கு....சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை...