தூத்துக்குடியில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்...திரளானோர் பங்கேற்பு!

தூத்துக்குடியில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்...திரளானோர் பங்கேற்பு!

தூத்துக்குடி அருகே பூவனநாத சுவாமி கோயில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழா கடந்த 5ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதையும் படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி...!

இந்நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம ஆராதனைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தனி தனி தேரில் வலம் வந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.