கோவை: இரவில் சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவை: இரவில் சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் நடைபெற்றும் சாலை பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர், அதன் பின்னர் சவுரிபாளையம், பீளமேடு பி.எஸ்.ஜீ. ஹட்கோ காலனி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார்.

இதையும் படிக்க : "பொதுத்தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம்" - +2 மாணவ - மாணவியருக்கு முதலமைச்சர் வாழ்த்து!

மேலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் முத்துசாமி, காந்தி, செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.