ரூ 16.28 லட்சம் மதிப்பீட்டில் குறுவட்ட அளவர் கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்...!
மன்னார்குடிஅருகே கோட்டூரில் ரூ 16.28 லட்சம் மதிப்பீட்டில் குறுவட்ட அளவர் கட்டிடத்தை மாவட்டஆட்சியர் திறந்து வைத்தார்.
மன்னார்குடிஅருகே கோட்டூரில் ரூ 16.28 லட்சம் மதிப்பீட்டில் குறுவட்ட அளவர் கட்டிடத்தை மாவட்டஆட்சியர் திறந்து வைத்தார்.
குறுவட்ட அளவர் :
சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 'குறுவட்டம்' (REVENUE FIRKA) அமைக்கப்படுகின்றன. இந்த வருவாய் குறுவட்டம் நில அளவைத் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக குறுவட்ட அளவர் இருப்பார். இவரால் நில அளவை குறித்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து நில அளவைப் பணிகளையும் செய்து வரைபடம் தயாரித்து, அறிக்கையுடன் வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பிவைக்கபடும்.
கட்டிடம் திறப்பு விழா :
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தமிழக அரசு சார்பாக ரூ 16.28 லட்சம் மதிப்பீட்டில் குறுவட்ட அளவர் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டபட்டது. அதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து, வருவாய் அலுவலர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.