"அனைவரும் சமநிலை என்பதே திராவிட மாடல்" - அமைச்சர் மதிவேந்தன்

ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் பின்பற்றிய கம்யூனிசமும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பின்பற்றும் திராவிட மாடலும் ஒன்று தான் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் ரஷ்யாவுக்கு கல்விப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இதையும் படிக்க : ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு...!

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மதிவேந்தன், அனைவரும் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் சமூகத்திலும் சமநிலை பெறவேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் பின்பற்றிய கம்யூனிசமும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பின்பற்றும் திராவிட மாடலும் ஒன்று தான் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.