வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மின்வாரியம் உத்தரவு

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2020-21ம் ஆண்டிற்கான கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மின்வாரியம் உத்தரவு

மின் வாரியம் சார்பில் புதிய மின் இணைப்பு வழங்கும் போது, நுகர்வோரிடம், காப்பு வைப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட தொகையை வசூலித்து வருகின்றனர்.மின் பயன்பாட்டை பொறுத்து, வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த நுகர்வோரின் வைப்பு தொகை, இரண்டு ஆண்டுகளுக்கு, ஒரு முறை மாற்றப்பட்டு வருகிறது.  

இதனிடையே, 2020-21ம் நிதியாண்டுக்கான கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கும் பணிகள் கொரோனா பாதிப்பு காரணமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு தற்போது பல தளர்வுகள் அளித்துள்ள நிலையில், கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்த ஆய்வு நடத்த அனைத்து மின் பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.