பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு - வரும் 11-ம் தேதி ஆஜராகஉத்தரவு

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்குத் தொடர்பாக வரும் 11-ம் தேதி பெண் எஸ்.பி, அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக விழுப்புரம்  நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு - வரும் 11-ம் தேதி ஆஜராகஉத்தரவு

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்குத் தொடர்பாக வரும் 11-ம் தேதி பெண் எஸ்.பி, அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக விழுப்புரம்  நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்தவர் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது குறிப்பிடதக்கது..