வாடிக்கையாளரை வெளியே தள்ளி கதவை அடைத்த வங்கி அதிகாரி...வீடியோ வைரல்

ஈரோடு அருகே வங்கி அதிகாரி, வாடிக்கையாளர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு அவரை வெளியே தள்ளிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வாடிக்கையாளரை வெளியே தள்ளி கதவை அடைத்த வங்கி அதிகாரி...வீடியோ வைரல்

ஈரோடு அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், புதிதாக வங்கி கணக்கை துவங்க ஈரோடு ரங்கம்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது 10 நாட்கள் கழித்து வருமாறு கூறிய வங்கி அதிகாரி, விண்ணப்பத்தை கிழித்து குப்பையில் வீசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரை வங்கி அதிகாரி தாக்க முயன்று கைகலப்பில் ஈடுபட்டதுடன், இளைஞரை வெளியே தள்ளி கதவை அடைத்துள்ளார். இந்த காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம், இளைஞரை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.