இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இருவர் மீது ஏறி இறங்கிய பேருந்து- பதற வைக்கும் சிசிடிவி காட்சி..

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது அரசு பேருந்து ஏறி இறங்கியதில், இருவரும் தலை நசுங்கி உயிரிழந்த, பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இருவர் மீது ஏறி இறங்கிய பேருந்து- பதற வைக்கும் சிசிடிவி காட்சி..

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ஷாஜி மற்றும் பிரேம்குமார். இவர்கள் இருவரும் களியக்காவிளையில் இருந்து குழித்துறை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது களியக்காவிளை காவல்நிலையம் அருகே உள்ள சாலையின் எதிரே கடை நடத்தி வரும் நசீர் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்த சமயம் அங்கு வந்த இருசக்கர வாகனம் நசீர் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் இருந்த இளைஞர்கள் இருவரும் கீழே சரிந்து விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கீழே விழுந்த இளைஞர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நசீர் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமிராவை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.