நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம்: கரு.நாகராஜன் விமர்சனம்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம் என்று பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார்  

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம்: கரு.நாகராஜன் விமர்சனம்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழுவை எதிர்த்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருவோம் என கூறிவிட்டு தற்போது நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசினால் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது என என்னால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது எனவும், இந்த குழு நீட்டுக்கு எதிரான எந்தவித ஆராய்ச்சியிலும் ஈடுபடவில்லை, இந்தக் குழு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் இதன் மூலம் திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசிக தலைவர் திருமாவளவன் கூறுவது போல இந்த தேர்வினால் தொற்று பரவாது என்றும் ஒரே நாள் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும் தேர்வு என்று மால்கள் மார்க்கெட்டுகள் என அனைத்தும் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் தேர்வு நடத்துவதில் தவறில்லை. எங்களது முழு நோக்கம் மாணவர்கள் குழப்பும் அடைய கூடாது என்பதுதான் என்றும் கூறினார்.பாஜகவின் கருத்தையே நீதிமன்றமும் கூறியுள்ளது என்றும் தமிழகத்தின் ஒரு குடிமகன் என்ற முறையில் வழக்கு தொடுத்ததாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அரசாணையை ரத்து செய்ய தாங்கள் வழக்கு தொடர்பாகவும் தற்போது இந்தக் குழுவினால் நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக பாஜகவின் கருத்தையே உயர்நீதிமன்றம் தெரிவித்தாகவும் கூறினார். மேலும் நீட் தேர்வு குறித்த இந்த குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம் என்றும் இந்தக் குழுவால் நீட் தேர்வுக்கு பாதிப்பில்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 25 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சீட்டு கிடைக்காமல் தவித்ததாகவும் இதை சரி செய்யும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் தமிழக அரசு நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட குழுவானது மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை கட்டுபடுத்தும் இதுதவிர மத்திய அரசு நடத்தக்கூடிய தேர்வு முறைகளை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார்.