50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு... 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு... 

கரும்புளிப்பட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது  சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்ததால் அந்த தண்ணீரில் நீந்தியபடி மாடு சப்தமிட்டது.

மாட்டின் சப்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் மாட்டை கயிறு கட்டி ஒரு ஓரமாக நிறுத்தி பிடித்துக் கொண்டு மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பசுவை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.