ஆதீனத்தை தொட்டால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் - அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தப்பித்தவறி கூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் எனவும், ஆதீனத்தை தொட்டால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதீனத்தை தொட்டால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் - அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

திருச்சி புத்தூர் நான்கு ரோடு அருகே, பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் சேகர் பாபு, தொடர்ந்து மதுரை ஆதீனத்தை மிரட்டி வருவதாக கூறியதோடு, ஆதீனத்தின் மேல் கையை வைத்தால், விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்றும், ஆதீனத்தை மிரட்டுவது அழிவுக்கு காரணமாக அமைந்து விடும் என்றும், எச்சரிக்கை விடுத்தார்.