மத்திய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்து செய்ய முடியாது ...ஹெச். ராஜா

நீட்டை ரத்து  செய்துவிடுவோம் என திமுக கூறியது அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்றும் மத்திய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்து செய்ய முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெ.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்து செய்ய முடியாது ...ஹெச். ராஜா

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெ.ராஜா கூறுகையில்,

திமுக தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் நீட்டை ரத்து  செய்துவிடுவோம் என திமுக கூறியது அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்றார். மேலும் மத்திய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்து செய்ய முடியாது என கூறினார்.

மேலும் அதிமுகவில் உள்ள குழப்பத்திற்கும் சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு அங்கமாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதிற்கு, தொல்.திருமாவளவன் அவரே குழப்பத்தில் தான் இருப்பார், யார் அந்த திருமாளவன்  சரக்கு மிடுக்கு பேச்சுகாரர் தானே  திருமாளவன்  அவர்  ஒரு சமூக விரோதி என தெரிவித்தார்.