பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..! 4 ஆயுள் தணடனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..! 4 ஆயுள் தணடனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்..!

குழந்தைக்கு பாலியல் தொல்லை:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், கடந்த 2020 ஆம் ஆண்டு அவரின் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கில் தீர்ப்பு :

இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சுந்தர்ராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார். மேலும் அவருக்கு  20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு, ரூபாய் 10 லட்சம்  வழங்க பரிந்துரை செய்தும்  நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.