நீட், சி.ஏ.ஏ வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ....தயாநிதிமாறன் எம்பி வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்களை போல சி.ஏ.ஏ, நீட் போன்றவற்றையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தயாநிதிமாறன் எம்பி தெரிவித்துள்ளார்.

நீட், சி.ஏ.ஏ வை  மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ....தயாநிதிமாறன் எம்பி வலியுறுத்தல்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறுகையில், தமிழக முதலமைச்சரை பொறுத்தவரை பதவியேற்ற நாளில் இருந்து வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என கூறிய அவர், வீட்டுக்குள்ளிருந்து வெளியே வராதவர்கள் , புற முதுகை காட்டுபவர்கள் கூறும் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார்

மேலும் விவசாயிகளை தேச விரோதிகள் என்று சொன்னது யார்? 18 மாதங்களாக கடும் குளிரில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். 15 லட்சம் கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தது யார் ? என கேள்வி எழுப்பிய அவர், வேளாண் சட்டங்களை போல சி.ஏ.ஏ, நீட் போன்றவற்றையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கூறினார்.

10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஊழல் செய்தது. மக்களுக்கான திட்டத்தை புறக்கணித்தது முன்னாள் அமைச்சர்கள், முதல் அமைச்சர் உட்பட அனைவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்தார்கள் என தெரிவித்தார்.