வங்கியில் தவறவிட்ட பணம்...! உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்...!
திண்டிவனம் அருகே வங்கியில் தவறவிட்ட ரூ. 50 ஆயிரத்தை காவல் நிலையத்தின் மூலமாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பணம் தவறிய சம்பவம் :
திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவர் இந்த பகுதியில் சுய உதவி குழு தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெள்ளிமேடு பேட்டை பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றுக்கு வந்த அவர், சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டிய ரூ.50,000-ஐ வங்கியில் தவறவிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் :
இது குறித்து வெள்ளிமேடுப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அங்கு வந்த செம்பாக்கம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மணவாளன் என்பவர் அரசு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகவும், அந்தப் பணம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உரியவரிடம் பணம் ஒப்படைப்பு :
இந்நிலையில் போலீசார் காஞ்சனாவிடம் விசாரணை செய்து பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின்பு, பொதுமக்கள் முன்னிலையில் பணத்தை, போலிசார் அவரிடம் ஒப்படைத்தனர்.
நேர்மையாக ஒப்படைத்தவருக்கு பாராட்டுக்கள் :
வங்கியில் தவறவிட்ட ரூபாய் 50 ஆயிரத்தை நேர்மையாக போலீசார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மணவாளனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.