இணைய வழி தேர்வு நடத்த வேண்டும்... கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இணைய வழி தேர்வு நடத்த வலியுறுத்தி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இணைய வழி தேர்வு நடத்த வேண்டும்... கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்...

கல்லூரி வாயில் இருந்து ஊர்வலமாக சென்று, அழகப்பா பல்கலைக்கழகம் முன்பு திரண்டனர். கடந்த சில மாதங்களாக வகுப்புகள் இணைய வழியாக நடத்தப்பட்டது போல தேர்வுகளையும் இணையம் வழியாக நடத்த வேண்டும் என்றும், நேரடியாக தேர்வுகள் நடத்தப்பட்டால் தேர்வில் தேர்ச்சி பெறுவது சிரமமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முழுமையாக வகுப்புகள் அனைத்தும் நேரடியாக நடத்தப்படும் போது நேரடி தேர்வுகளை நடத்தலாம் என்றும், அதுவரையில் இணைய வழி தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.