ரூ.288 கோடி செலவில் செயல்படுத்தவுள்ள...கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் கே.என்.நேரு!

ரூ.288 கோடி செலவில் செயல்படுத்தவுள்ள...கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் கே.என்.நேரு!

பாபநாசத்தில் 288 கோடி செலவில், கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அம்மாபேட்டை, பாபநாசம் ஒன்றியங்களில் உள்ள 67 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஜல்ஜீவன் திட்ட பங்களிப்புடன் 288 கோடி ரூபாயில், கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இதையும் படிக்க : டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்...குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்!

இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா,  தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.