5 ஆயிரத்து 231 கோடி ரூபாய் நிலுவை தொகையை  உடனடியாக  விடுவிக்க வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்...

தமிழக்திற்கு வழங்க வேண்டிய 5 ஆயிரத்து 231 கோடி ரூபாய் நிலுவை தொகையை  உடனடியாக  விடுவிக்க மத்திய அரசிடம்  கோரிக்கை வைத்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

5 ஆயிரத்து 231 கோடி ரூபாய் நிலுவை தொகையை  உடனடியாக  விடுவிக்க வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்...

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்.  அதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி,தமிழகத்திற்கு  கூடுதலாக ரேஷன் அரிசி ஒதுக்க வேண்டும், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  உயர்த்த வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் தமிழக்திற்கு வழங்க வேண்டிய 5 ஆயிரத்து 231 கோடி ரூபாய் நிலுவை தொகையை  விடுவிக்கவும்  கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.