சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்... கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

தெருக்களில் விளையாடிய சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை தெரு விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்... கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி பகுதியில் தெருக்களில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு ஒரு நபர் மிட்டாய் வாங்கி கொடுத்து அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அந்த நபரை அடுத்து பிடுத்து தெருவிளக்கு மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதை தொடர்ந்து தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 43) என தெரியவந்தது.

மேலும் பொதுமக்கள் அடித்ததில் அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டும் சிகிச்சைக்குப் பின் தென்கரை காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.