கரூர் வருகை தந்த முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற பொதுமக்கள்!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர் வருகை தந்த முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற பொதுமக்கள்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவருக்கு கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை மருதூர் சுங்கச்சாவடியில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பூரண கும்ப மரியாதை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

கரூர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பயணம் மேற்கொள்ள உள்ளார்.