அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்...!

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்...!

நெல்லை ராமையன்பட்டி அருகே கலாம் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு பொது மக்களுக்கு குடிநீர், சாலை, சுடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது, தங்கள் பகுதியில் குடிநீர் இல்லை, சாலை வசதி இல்லை, சுடுகாடு இல்லை என்றும்  குடிநீருக்காக அடுத்த ஊரை தேடி செல்கிறோம். எனவே தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.