"மாநில கல்விக் கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்" - பொன்முடி

மாநிலக் கல்விக்கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலைஞர் நூற்றாண்டு விழா - சமூக நீதிக் காவலர் கலைஞர் குழுவினருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

இதையும் படிக்க : "கடத்தப்பட்டவர்கள் திரும்பும் வரை காசாவுக்கு நீர் இல்லை" - இஸ்ரேல் எரிசக்தித்துறை அமைச்சர் எச்சரிக்கை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கிடையே கலைஞரும் தமிழும், கலைஞரும் சமூக நீதியும், கலைஞரும் அரசியல் அதிகாரமும், கலைஞரும் பெண்ணியமும், கலைஞரும் அறிவியலும் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.