உத்திரபிரதேச விவகாரத்தில் வெளியான வீடியோ பொய்யான வீடியோ..........அர்ஜுன் சம்பத்

உத்திரபிரதேச விவகாரத்தில் வெளியான வீடியோ பொய்யான வீடியோ என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச விவகாரத்தில் வெளியான வீடியோ பொய்யான வீடியோ..........அர்ஜுன் சம்பத்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, வாரத்தில் மூன்று நாட்கள் கோவில்களை அடைத்து வைத்திருப்பது என்பது தமிழக ஆன்மீக வாதிகளின் உள்ளத்தை புண்படுத்தியுள்ளது என்றும் கொரோனாவை காரணம் காட்டி மற்ற மதங்களுக்கு அனுமதி வழங்கும் இந்த அரசு இந்து மக்களுக்கு அநீதி இழைக்கிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் இருந்தவர்கள் விவசாயிகள் அல்ல என்றும் இந்த விவகாரத்தில் ராகுல், பிரியங்கா பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர் என்றார். மேலும் கலவரம் குறித்து வெளியிட்ட வீடியோ , ஜோடிக்கபட்ட வீடியோ என்று கூறிய அவர், பிரியங்கா செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் துணை போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.