தனக்கும் ஈ.பி.எஸ்-க்கும் எந்த பாகுபாடும் இல்லை - ஓ.பி.எஸ்...

தனக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித பாகுபாடும் இல்லை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிதனியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தனக்கும் ஈ.பி.எஸ்-க்கும் எந்த பாகுபாடும் இல்லை - ஓ.பி.எஸ்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில்  கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான அன்னை சத்தியா நகர், வடபழனி, எழும்பூர் ,புதுப்பேட்டை, துறைமுகம், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின்னர் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிந்து வருவதாக தெரிவித்தார். தற்போது பெய்த மழையின் காரணமாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பெரும் துயர் அடைந்துள்ளதாகவும்,அதனால் அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.