மகளிர் தினத்தன்றாவது விடுமுறை கொடுப்பீர்களா ....!!

மகளிர் தினத்தன்றாவது விடுமுறை கொடுப்பீர்களா ....!!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பெண்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த மகளிர் தினத்தில் அன்றாடம் பகல் பொழுதுகளில் குப்பைகளில் மிதக்கும் சென்னையை இரவு நேரங்களில் துப்புரவு பணி செய்து விடிவதற்குள் மீண்டும் தூய்மையாக மாற்றும் துப்புரவு பணியாளர்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

இரவு நேரங்களில் பணி செய்வது தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை என்றும் துப்புரவு தொழிலை ஒரு சேவையாக செய்து வருவதாகவும் புன்னகையுடன் தெரிவிக்கின்றனர்.  எல்லா துறைகளிலுமே ஒவ்வொரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.  ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரியும் எங்களுக்கு தீபாவளி பொங்கல் போன்று விடுமுறை நாளே இல்லை எனவும் மகளிர் தினத்தில் எங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்  என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:   அப்பாவின் பிறந்தநாளுக்கு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்